நேர்கோட்டில் செல்வது அல்ல இவ் வாழ்க்கை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் கூட அந்த கணத்திற்கான ஆச்சரியத்தையும் திருப்பங்களையும் ரகசியமாகவே வைத்திருக்கிறது. ஆனால் இதுவெல்லாம் சேர்ந்து தான் ஒரு வாழ்வாக நம்முள் மலர்கிறது. நிகழ்வுகளைக் கோர்த்துப் பார்க்கும் போது அதை நம் வாழ்வாக மாற்றிப் பார்க்கிறோம். ஆனால் தன்னளவில் ஒவ்வொருவரின் வாழ் கணமும் ஒரு நிகழ்வுதான். அவற்றைப் பின்னாளில் பார்க்கும் போது ஓர் அந்நியனின் வாழ்க்கையாகவே அவரவர்க்குத் தெரியும்.
எழுத்தாளர் வா.மு.கோமு எழுதிய அந்நிய ஆடவன் நாவலின் ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு நிகழ்வாக, கதையாக விரிகிறது. அதில் யாரோ ஒருவர் யாரோ ஒருவரால் பாதிக்கப்படுகிறார். ஏமாற்றப்படுகிறார். ஆனால் நாவல் முழுவதும் அந்தக் காரியத்தைச் செய்பவர் கதாபாத்திரத்திற்கு அந்நியமாய் வந்து சேரும் ஒரு ஆடவனாகவே இருக்கிறார்.
நான் அடிக்கடி சென்று வரும் சென்னிமலை, வெள்ளோடு மற்றும் சொந்த ஊர் ஊத்துக்குளி என்றே கதைகளின் களமும் மாந்தர்களும் வந்து செல்வதால் எளிதாக என்னை அதனுள் பொருத்திக் கொள்ள முடிந்தது.
நாவலின் துவக்கத்தில் வரும் #வா_மு_கோமு அவர்களின் முன்னுரையே ஒரு சிறுகதையாக மிளிர்கிறது. அவரின் வழக்கமான எள்ளல் மற்றும் அங்கத நடையில் ரசிக்க வைக்கிறது.
முதல் அத்தியாயம் ஒரு நாயின் பார்வையில் மிகச் சிறப்பாக விரிகிறது. அதில் வரும் சாத்தான் அந்த நாயை மஹாராஜா என்றழைக்கிறான். தன்னை யாரும் அழைக்காத ஒரு பெயரால் விளிக்கும் சாத்தானுடன் தன் வாழ்நாளை கழிக்க நினைக்கும் நாய்க்கு அவன் ஓர் அந்நிய ஆடவன் தான்.
தந்தையின் களியாட்டத்திற்கு ஏற்படும் தடங்கல்களை தடுத்திடாத சிறுவன் முருகனை அடிக்கும் போது அவன் தந்தை அவனுக்கு அந்நிய ஆடவனாகிப் போகிறான்.
விலை ரூ. 175
No comments:
Post a Comment