Pages

Monday, April 11, 2022

நீதிக் கதை- லூயிஸ் க்ளக்



இரு பெண்கள் ஒரே உரிமைக்காக
அறிவுசான்ற அரசனிடம் வந்தனர். இரு பெண்கள்,
ஆனால் ஒரே ஒரு குழந்தை.
அரசனுக்குத் தெரியும்
ஒருவர் பொய் சொல்கிறார் என.
அவர் சொன்னது என்னவெனில்,
குழந்தையைப் பாதியாக
வெட்டுவோம்; அதனால்
யாரும் வெறுங்கையுடன்
செல்ல வேண்டுவதாகாது. அவர்
தன் வாளை உருவினார்.
பிறகு, இரு பெண்களில் ஒருவர்
தனது பங்கை தத்தம் செய்தார்:
இது தான் அறிகுறி, பாடம்.
ஒருவேளை
உங்கள் தாய்
இரு மகள்களிடையே பிய்க்கப்படுவதை
நீங்கள் பார்த்தால்
அவளைக் காக்க உங்களால்
என்ன செய்ய முடியும்
உங்களையே அழித்துக் கொள்ள
விரும்புவதைத் தவிர.
அவளுக்குத் தெரியும்
யார் உரிமையுள்ள குழந்தை என,
தாயைப் பங்கு போடுவதை
பொறுத்துக் கொள்ளாதவர்தான்.

-லூயிஸ் க்ளக். (கவிஞர், நோபல் பரிசாளர்-2020) #Wild_Iris தொகுப்பிலிருந்து A Fable என்ற கவிதை.

தமிழில்- க.ரகுநாதன்

No comments: