ஒளிர்ந்திடும் மத்தாப்பின்
சரசர வெடிப்பொலியில் கேட்கிறது
சாலையோரச் சிறுமியின் குறுஞ்சிரிப்பு.
சங்குச் சக்கர கிறுகிறுப்பில்
கரகரவென சுற்றியவளின் கிழிந்த பாவாடை
பலூனாக ஊதிச்சுழன்று அமிழ்கிறது.
பாம்புக் குளுவையிலிருந்து எட்டிப் பார்க்கும்
ஆதிசேஷனின் பெருமூச்சில்
புஸ்வாண ஒலி கொண்டு
ராக்கெட்டுகளாய் சிறிப் பாய்கின்றன
பிளவுண்ட நாவுகள்.
அவள் கனவில் ஏறி
அரவத்தின் உடலாய் நீண்ட
சாட்டைக் கங்குகளின் ஒளியில்
இதழோரம் மின்னுகிறது ஒரு சுடர்.
தகரக் கதவில் ஒளியின் புதிர்த் தடம்
ஊர்ந்து வந்த புலரியில்
வாசலில் எட்டிப் பார்த்தவளின் முகத்தில்
தன்னுடல் வெடிப்பின் மென் கதிர்களை
பாய்ச்சிய இளஞ்சூரியனிடம்
புன்னகைத்துப் பாடுகிறாள்-
நான் சிரித்தால் தீபாவளி…
Sunday, April 10, 2022
சூரியனிடம் புன்னகைக்கும் சிறுமி
Subscribe to:
Post Comments (Atom)
-
பிரகாசமாக எரியும் விளக்கின் கீழே எப்போதும் இருக்கும் இருளைப் போல மனதை மயக்கும் பிரமாண்டங்களின் உள்ளே விசித்திரங்களும் அபத்தங்கள...
-
வானாகினாலும் மண்ணாகினாலும் ஊனாகினாலும் உயிரே போனாலும் காதல் ஒன்று தான் . அது எங்கும் யாரிடத்திலும் ஒன்றுதான் என்ற அவன் பேச்சுக்கு முதல்...
-
சி றுவயது நினைவு ஒரு சங்கிலித் தொடர் போன்றது. ஒவ்வொருவருக்கும் தனது பால்ய கால மிச்ச நினைவுகள் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து கொண்டே இருக்கி...
-
ஆழ்ந்து உறங்குபவன் அசைவற்றுக் கிடப்பது போல் பின்னிரவில் அந்தக் கானகம் நிசப்தத்துடன் இருந்தது . மரம் , செடி , கொடி என அனைத்தும் ...
-
மனிதர்களின் மனம் எப்போதும் இழந்ததை நினைத்து ஆயாசப்படும் . மண்ணையும் உறவுகளையும் இழந்து தவித்து துன்பப்படும் மனதைக் கொண்டிராதவர்...
No comments:
Post a Comment