வெண்ணிற நுரைகளை
பொதிகளாய் சுமந்து வந்து
ஒதுக்கும் கடற்கரையில்
இளைப்பாறுகின்றன
வெண்சாம்பல் இறகு கொண்ட
பெயரறியா கடற்பறவைகள்
நண்டுகள் ஓடி நகரும் அக்கரையில்
சிற்றலைக்குப் பயந்தபடியே
பறவைகளுடன் பேச ஓடுகிறாள்
கூந்தல் அலைபாய்ந்த சிறுமி
அவளின் சிற்றெழில் கரங்களுக்குள்
வேறுலகம் உள்ளதை
கண்டுகொண்ட பறவைகள்
சிறகு விரித்துப் பறந்தெழ
கூட்டத்திலொரு
கடற்பறவையாகி இருந்தாள் சிறுமி.
No comments:
Post a Comment