கண் மூடிய இருளில்
ஒளியைத் தேடுகிறது அகம்.
இல்லாத ஒன்றில் இருந்து
புள்ளியாய் துவங்கி
பெருகி வழிகிறது ஒளி.
அகமிருள் வட்டத்தின் ஓரத்தில்
செவ்வொளியோடு சிதறும்
ஒளித் தெறிப்புகளில்
வடிவில்லா வடிவாகி
ஒளியில்லா ஒளியாகி
ஒளிக்குள் ஒளி கலந்து
ஒலியில்லா ஒலியுள் நுழைந்து
பரவிப் போன பின்
அகமே கேட்கும்
மௌனத்தின் ஒலி.
வடிவம் போய்
ஒளி போய்
ஒலி போய்
பேரிருள் வழிய
அகமெங்கும் இருள்.
கண் திறக்க பரந்து
கவிழ்ந்தது வான்.
க. ரகுநாதன்
No comments:
Post a Comment