மாநகர சுழற்சியின்
பேரிரைச்சலினூடே
பிளாஸ்டிக் குவளையில்
குலுங்கி அமர்கிறது
சில்லறைக் காசுகளின்
சலக் சலக் ஓசை.
உச்சந்தலையை
உற்றுப் பார்ப்பதைத் தவிர
வேறு வேலை இல்லையென
ஊர்ந்து செல்கிறது
மதிய வெயில்.
வயிற்றின் ஓலத்தை
குவளையின் ஓசையால் மௌனமாக்க
ஜென் சாமியின் நிதானத்துடன்
கைத்தடியைப் பின் தொடர்கிறான்
பார்வையற்ற யாசகன்.
முகங்கள் கோணலாகி
விலகி ஓடுகின்றன
பெருந்தொற்று கவலைக் கால்கள்.
கையிலிருந்த கடைசி நாணயங்களையும்
குவளையுள் காணிக்கையாக்க
சற்றே புன்னகைத்து மறைகின்றன
என் முகத்தில் அவன் கண்களும்
அவன் கண்களில் என் முகமும்.
No comments:
Post a Comment